Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு: திமுக மீது அதிமுக குற்றச்சாட்டு :

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகளில் திமுகவினர் முறைகேடு செய்ய முயற்சி செய்வதாக அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, அதிமுக நகரச் செயலாளர் ஆர்.ஜி.குமார், கட்சி நிர்வாகிகள் பொன்.வாசுகிராமன், கண்ணதாசன், நாராயணன், முன்னாள் கவுன்சிலர் கோபி மற்றும் நிர்வாகிகள் நேற்று மன்னார்குடி கோட்டாட்சியர் அழகர்சாமியிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக தற்போது வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் பணி நடைபெற்று வருகிறது. இதில், சில முறைகேடுகள் நடைபெறுவதாக அறிகிறோம். ஆளுங்கட்சியான திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்து இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். யாருடைய நிர்பந்தத்துக்கும் அடிபணியாமல், உரிய அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்யும் பணி நடைபெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x