Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM

தொழிற்சாலைகளில் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: அமைச்சர் :

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும், தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவின் ஒருபகுதியாக, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் மகளிர் நாள் விழா நேற்று முன்தினம் காரைக்காலில் நடத்தப்பட்டது.

இதில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற பெண்களுக்கு பரிசு, சிறந்த மகளிர் குழுக்களுக்கு கேடயம் ஆகியவற்றை வழங்கிப் பேசியது: அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் புதுச்சேரி மாநிலத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பெண்களுக்கு புதிய திட்டங்களை விரைவில் உருவாக்கி செயல்படுத்த புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

ஆட்சியர் அர்ஜூன் சர்மா, வட்டார வளர்ச்சி அலுவலர் அருணகிரிநாதன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை நலத்திட்ட அலுவலர் பி.சத்யா, சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x