Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM
காரைக்கால் மாவட்ட கல்வித்துறை துணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) மு.ராஜேஸ்வரி நேற்று தெரிவித்துள்ளது:
டெல்லியில் உள்ள மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககத்தால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும், தேசிய திறனறி முதல் நிலைத்தேர்வு 23.1.2022-ல் நடைபெற உள்ளது. முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் ஒருமுறை மட்டும் புதுச்சேரி அரசால் வழங்கப்படும்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பள்ளியின் மூலம் www.nmmsntspdy.com என்ற இணையதள முகவரியில் டிச.6-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT