Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM
வாணியம்பாடி நகர பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மகள் ஜாக்கியா. இவர், கடந்த 19-ம் தேதி அதே பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் நகர காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
காவல் துறையினர் ஜாக்கியா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான முகமது நிப்ராஸ்சையான் என்பவரும், தற்கொலை செய்து கொண்ட ஜாக்கியாவுக்கும் நட்பு இருந்து வந்ததாகவும், இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஜாக்கியா தற்கொலை செய்து கொண்டதும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில், இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கல்லூரி மாணவர் முகமது நிப்ராஸ்சையானை நேற்று காவல் துறையினர் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT