Published : 26 Nov 2021 03:11 AM
Last Updated : 26 Nov 2021 03:11 AM

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று முதல் - அதிமுகவில் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் : எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி தகவல்

வேலூர்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுகவில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரு மான எடப்பாடி கே.பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணையின்படி, வருகிற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்கள் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை, நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரும் திருவண்ணாமலை நகராட்சி மற்றும் கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், செங்கம் பேரூராட்சி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்திலும், போளூர், களம்பூர், சேத்துப்பட்டு பேரூராட்சி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் போளூர் அதிமுக அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பப் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும் போளூர் சட்டப்பேரவை உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தனது அறிக்கையில் தெரிவித் துள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x