Published : 26 Nov 2021 03:11 AM
Last Updated : 26 Nov 2021 03:11 AM

வந்தவாசியில் விவசாயிகள் போராட்டம் :

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் வந்தவாசியில் விவசாயிகள் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உழவர் பேரவை சார்பில் நடைபெற்ற நூதன போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்தாண்டை விட, கூடுதலாக 30 சதவீதம் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. நவம்பர் மாதத்தில் பெய்த தொடர் மழையால், பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், உளுந்து, மணிலா உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஓர் ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர் சேதங்களை கணக்கிட வேண்டும் என தமிழக அரசு அறிவித்தும், சேதமடைந்துள்ள பயிர்களை கணக்கிட வேளாண் அலுவலர்கள் வரவில்லை. விவசாயிகள் கொடுக்கும் மனுவையும் பெற்றுக் கொள்ளவில்லை. டிசம்பர் மாதம் வரை மழை தொடரும் என்பதால், பயிர் சேதம் மேலும் அதிகரிக்கும். எனவே, பயிர் சேதங்களை கணக்கிடாமல் உள்ள வேளாண் உதவி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

பின்னர், வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் எதிரே முளையிட்ட நெல் கதிருக்கு மாலையிட்டு, வெற்றிலை வாழைப்பழம் படையலிட்டு, ஒப்பாரி வைத்து, கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வேளாண் உதவி இயக்குநரிடம் மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x