Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM

உடுமலையில் ஆசிரியர் வீட்டில் 3 பவுன் திருட்டு :

உடுமலை ராமசாமி நகரை சேர்ந்தவர் ஜெயசீலன் (42). பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர், கடந்தசில நாட்களுக்கு முன் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு, 21-ம் தேதிஇரவு வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் திருட்டுப் போனதுதெரியவந்தது. புகாரின் பேரில் மர்ம நபர்களை உடுமலை குற்றப்பிரிவு போலீஸார் தேடி வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x