Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM

அமைச்சர்களிடம் கோரிக்கை மனுக்களை அளிக்க பொதுமக்களுக்கு திமுக அழைப்பு :

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் ‘திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சியில் 10 வார்டுகள் மற்றும் பல்லடம் நகராட்சி, அவிநாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி பேரூராட்சி மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி பகுதிகளில் இன்று (நவ.25) மற்றும் நாளை (நவ.26) ஆகிய இரு நாட்கள் மக்களை நாடும் நிகழ்வு நடைபெறுகிறது.

இதில் அந்தந்த பகுதி மக்கள் பங்கேற்று, தங்கள் பகுதிக்குதேவையான அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், சாக்கடை,தெருவிளக்கு, பொதுசுகாதாரம், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் இதரகோரிக்கைகள் தொடர்பாக தமிழக செய்தித் துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரிடம் மனுக்களை அளித்து பயன்பெறலாம். பொதுமக்கள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளை துறைரீதியாக தனித்தனி மனுக்களாக எழுத்துபூர்வமாக அமைச்சர்களிடம் அளிக்கவேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x