Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளுக்கு அடுத்த மாதம் முதன் முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட திமுக-வில் விருப்பமனுக்கள் பெறும் பணி நடைபெற்றது.
ஓசூர் - தளி சாலையில் உள்ள மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மேற்குமாவட்டச் செயலாளரும், ஓசூர் எம்எல்ஏ.வுமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களிடமிருந்து விருப்பமனுக்களை பெற்றுக்கொண்டார். முதல் நாளான நேற்று ஓசூர் முன்னாள் நகர தலைவர்கள் குருசாமி, என்எஸ்.மாதேஸ்வரன் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் ரூ.10ஆயிரம் தொகையுடன் விருப்பமனு அளித்தனர். இந்நிகழ்வில் ஓசூர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT