Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் :

தருமபுரி

தருமபுரி ஆட்சியர் அலுவலகத் தில், வரும் 7.12.21 அன்று ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7.12.21 அன்று காலை 10.30 மணியளவில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், தமிழக அரசின் கூடுதல் செயலரான ஓய்வூதிய இயக்குநரக நிதித்துறை இயக்குநர் பங்கேற்க உள்ளார். ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியம் தொடர்பான தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை 2பிரதிகளில் தயார் செய்து, நாளை (26-ம் தேதி)மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x