Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM

புதுச்சேரியில் 28-ம் தேதி வரை மீண்டும் கனமழை :

புதுச்சேரியில் வரும் 28-ம் தேதி வரை மீண்டும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அவசர தேவைக்கு மக்கள் தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் உதவி எண்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் 24-ம்தேதி முதல் 28-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அவசர உதவிக்கு 1070, 1077 ஆகிய எண்களில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x