Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM

போக்குவரத்து விதிமீறல்களால் பறிமுதலான வாகனங்களை பெற காவல்துறை அழைப்பு :

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட 472 வாகனங்களைத் திரும்பப் பெற காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவது, மது அருந்தி விட்டு வாகனம் இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட ஏராளமான வாகனங்கள் ஈரோடு மாவட்ட போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோராமல் உள்ள 472 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை, ஆனைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில், 27-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை உரிய ஆவணங்களைக் காட்டி, உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள போலீஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x