Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறுபுனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்து டன் தொடங்கியது. கோட்டாறு மறைமாவட்டஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளானபக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு சவேரியார்பேராலயம் மற்றும் வளாக பகுதிகள் வண்ண மின்விளக்குகளால் ஜொலித்தன. டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் கரோனாகட்டுப்பாடு காரணமாக கலைநிகழ்ச்சிகள், கூட்டங்கள் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 5.30 மணி, 6.30 மணி, 8.30 மணி, 9.30 மணி, 10.30 மணிக்கு திருப்பலிகள் நடைபெறுகின்றன. தமிழ், மலையாளம், ஆங்கிலம் மொழிகளில் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
ஜெபமாலை, புகழ்மாலை, நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் தினமும்நடைபெறவுள்ளன. டிசம்பர் 2-ம் தேதிகோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமையில் ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறும். 8 மற்றும் 9-ம் நாள் திருவிழாவன்று இரவுதேர்பவனி நடைபெறுகிறது. விழா நிறைவு நாளான 3-ம் தேதி காலை 11 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT