Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த தொழிலாளர்களில் 30-க்கும் மேற்பட்டோர் நவ.16-ம் தேதி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்தநிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிஐடியு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் ராஜூ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் மோகன், செயலாளர் கார்த்திக் மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x