Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழந்த வழக்கில் - திண்டுக்கல் நீதிமன்றத்தில் வேன் ஓட்டுநர் சரண்�  :

கரூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் மீது வேனை மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்கில் அதன் ஓட்டுநர் சுரேஷ்குமார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேற்று சர ணடைந்தார்.

கரூர் அருகே வெங்கக் கல்பட்டியில் நவ.22-ம் தேதி வாகனத் தணிக் கையில் ஈடுபட்டிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் மீது வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் உயிரி ழந்தார். தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணையில் ஈடு பட்டனர்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆராய்ந்ததில் ஜவுளி நிறுவனத்துக்கு தொழிலா ளர்களை ஏற்றிச்சென்ற வேன் என தெரியவந்தது. வேனை கைப்பற்றிய போலீஸார் அதன் ஓட்டு நரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், வேன் ஓட்டுநரான கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள குன்னுடையகவுண்டனூ ரைச் சேர்ந்த திருப்பதி மகன் சுரேஷ்குமார்(28) திண்டுக்கல் ஜேஎம்-1 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். இவரை நவ.30-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் லலிதாராணி உத்தரவிட்டார். இதையடுத்து ஓட்டுநர் சுரேஷ்குமார் கரூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x