Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

தஞ்சையில் 54 கடைகளை அதே இடத்தில் நடத்த அனுமதிக்கக் கோரி வணிகர்கள் போராட்டம் :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அண்ணா சிலையில் இருந்து பனகல் கட்டிடம் செல்லும் சாலையோரத்தில் உள்ள 54 கடைகள் மழைநீர் வடிகால் மீது கட்டப்பட்டுள்ளதாக் கூறி, இக்கடைகளைக் காலி செய்ய வியாபாரிகளுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியது. இதற்கு, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 54 கடைகளுக்கும் நேற்று முன்தினம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, இரு நாட்களுக்குள் கடைகளை காலி செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதற்கிடையில், அந்த கடைகளின் முன்பாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் நகரத் தலைவர் எஸ்.வாசுதேவன் தலைமையில் 54 கடைகளின் வணிகர்களும் நேற்று காலை முதல் மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாநகராட்சி நிர்வாகம் இதே இடத்தில் கடைகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x