Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த புத்தூரில் உள்ள எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி ராஜேஸ்வரி, கோவாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.
அதேபோல, கணிதவியல் 3-ம் ஆண்டு படிக்கும் அனுப்பிரியா 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று, தங்கம் வென்றார்.
இதையடுத்து, அகில இந்திய அளவில் தங்கம் வென்ற மாணவிகள் ராஜேஸ்வரி, அனுப்பிரியா ஆகியோருக்கு நேற்று புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு புத்தூர் கடைவீதியில் மாணவிகளுக்கு மேளதாளம் முழங்க மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தங்கம் வென்ற மாணவிகள் இருவரையும் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, துணை முதல்வர் சசிகுமார், உடற்கல்வி இயக்குநர் பிரபாகரன், ஊராட்சி மன்றத் தலைவர் வசந்தி ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி, பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT