Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

மனைவியை கட்டையால் தாக்கிய தலைமைக் காவலர் மீது வழக்குப் பதிவு :

திருவாரூர்: திருவாரூர் அருகே புலிவலம் கவுஜியா நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ்(40). திருவாரூர் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி குடியா(35). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 11-ம் தேதி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பால்ராஜ் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த குடியா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் குடியா அளித்த புகாரின்பேரில், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தலைமைக் காவலர் பால்ராஜ் மீது போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல, குடியா, அவரது சகோதரர் பிரபாகரன் மற்றும் உறவினர்கள் 2 பேர் சேர்ந்து தன்னை தாக்கியதாக பால்ராஜ் அளித்த புகாரின்பேரிலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x