Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM
கோவில்பட்டி: விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையிலான தனிப்படையினர் குளத்தூர் அருகே சூரங்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தினர். போலீஸாரை பார்த்ததும், ஓட்டுநர் காரை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார். காரை சோதனையிட்டபோது அதில், தலா 50 கிலோ எடை கொண்ட 35 மூட்டை ரேஷன் அரிசியை கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி, கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT