Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

60 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் திருட்டு :

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டை யாதவர் தெருவைச் சேர்ந்தவர் சுதானந்தன்(50). ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அரக்கோணம் அருகே உள்ள கைனூர் கிராமத்தில் இவருக்கு மற்றொரு வீடு உள்ளது. இந்நிலையில், அரக்கோணம் அசோக்நகர் பகுதியில் புதிதாக கட்டிய வீட்டில் கார்த்திகை தீபம் கொண்டாட சதானந்தன் தனது மனைவி, மகள்களுடன் அங்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று காலை குருவராஜபேட்டைக்கு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறை கதவு உடைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 60 பவுன் நகைகள் ரூ.10 லட்சம் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் சதானந்தன் நேற்று புகார் செய்தார். இதையடுத்து, அரக்கோணம் டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ், கிராமிய காவல் ஆய்வாளர் சேதுபதி மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் சேகரிக்கப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x