Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM
ஈரோடு: பெருந்துறையில் சட்டவிரோதமாகக் குடியிருந்த வங்க தேசத்தைச் சேர்ந்த 10 பேருக்கு, ஈரோடு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். மேற்கு வங்கம் வழியாக இந்தியாவில் நுழைந்த வங்கதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல், தங்கியுள்ளனரா என்பது குறித்து ஈரோடு போலீஸார் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி பெருந்துறை போலீஸார், பணிக்கம்பாளையம் பகுதியில் சோதனை செய்தபோது, பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேரைக் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு பெருந்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT