Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வரும் 26-ம் தேதி காலை 11 மணிக்கு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு கிறது.
மீன்வளத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய குறைகள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை இக்கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் வழங்கி பயன்பெறலாம் என்று ஆட்சியர் தெரி வித்துள்ளார். கருங்கல் பேருந்து நிலையம் அருகே கண்டன்சாஸ்தா கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் மாலையில் பூஜை செய்ய பூசாரி வந்தபோது, காணிக்கை உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த ரூ.5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணம் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
திருட்டில் ஈடுபட்டவரை இரு தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT