Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM

திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கொக்கிரகுளம் துணை மின்நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், திருவனந்தபுரம் சாலை, வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை, குருந்துடையார்புரம், நேதாஜி சாலை, குறிச்சி, நத்தம், குட்டி மூப்பன்தெரு, காஜாநாயகம் தெரு, அத்தியடி தெரு பகுதிகளில் மின்தடை செய்யப்படும்

திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கொக்கிரகுளம் துணை மின்நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், திருவனந்தபுரம் சாலை, வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை, குருந்துடையார்புரம், நேதாஜி சாலை, குறிச்சி, நத்தம், குட்டி மூப்பன்தெரு, காஜாநாயகம் தெரு, அத்தியடி தெரு பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

தச்சநல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, தச்சநல்லூர், நல்மேய்ப்பர்நகர், செல்வவிக்னேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு, தெற்கு பாலபாக்யாநகர், மதுரை சாலை, திலக்நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், இருதயநகர் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர் அருகே நாரணபுரம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. எனவே, இன்று (24-ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாபேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழபுதூர், நெல்கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளார், வெள்ளாளங்கோட்டை, தாருகாபுரம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

விஸ்வநாதபேரி உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் நாளை (25-ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகிரி, தேவிபட்டிணம், விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் மீனாட்சிபுரம் துணைமின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (25-ம் தேதி) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டாறு, மீனாட்சிபுரம், கணேசபுரம், ஒழுகினசேரி, இடலாக்குடி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிகுளம் சந்திப்பு, சற்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோயில் சந்திப்பு, கேபி ரோடு, ராமவர்மபுரம், எஸ்.எல்.பி. தெற்கு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இதுபோல் நாகர்கோவில் துணை மின்நிலையப் பகுதிகளில் வரும் 26-ம் தேதி பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வடசேரி, ஆசாரிபள்ளம், தடிக்காரன்கோணம், வல்லன்குமாரவிளை துணை மின்நிலையங்கள் மற்றும் அதைசார்ந்த பகுதிகளிலும், நாகர் கோவில் பெருவிளை, சுங்காங்கடை, கிருஷ்ணன் கோயில், எம்.எஸ்.ரோடு, கல்லூரி சாலை, நீதிமன்ற சாலை, கே.பி.ரோடு, பால்பண்ணை, நேசமணிநகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன்நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், ராஜாக்கமங்கலம், ஆலங்கோட்டை, கணபதிபுரம், சூரப்பள்ளம், பிள்ளையார்விளை, காரவிளை, வைராக்குடி, பருத்திவிளை, எறும்புக்காடு, பழவிளை, அனந்தநாடார் குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது என்று நாகர்கோவில் மின்விநியோக செயற்பொறியாளர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x