Published : 24 Nov 2021 03:10 AM
Last Updated : 24 Nov 2021 03:10 AM
வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா, அன்னை தெரசா கிராம பொதுநலச் சங்கத்தில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா, தேசிய நூலக வார விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. நியூசிலாந்தில் இந்திய வெளியுறவுத் துறையில் இரண்டாம் நிலை செயலாளராக பணியாற்றி வரும் தாஸ் ஜெயக்குமார் தலைமை வகித்து, ரூ.45 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை தொடங்கி வைத்தார். அவருக்கு பொது நல பெருந்தகை விருது வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் சேகர், உதவி தலைமை ஆசிரியர் புளோரிடா சிறப்புரையாற்றினர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அரசு கிளை நூலகத்துக்கு ரூ.5,000 மதிப்பிலான நூல்கள் வழங்கப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனியசாமி, அன்னை தெரசா கிராம பொது நலச் சங்க செயலாளர் ஜேம்ஸ் அமிர்தராஜ், பொருளாளர் முத்துக்கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT