Published : 24 Nov 2021 03:10 AM
Last Updated : 24 Nov 2021 03:10 AM

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் :

திருவண்ணாமலை: மாற்றுத்திறனாளிகளுக்கான ஏடிஐபி திட்டத்தின் கீழ் தி.மலை நாடாளுமன்ற உறுப்பினர், ஏஎல்ஐஎம்சிஓ நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் அளவீடுகள் மற்றும் பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு முகாம் தி.மலை அடுத்த வேங்கிக்காலில் நேற்று நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநில தடகள சங்கத் தலைவர் கம்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம் வரவேற்றார். முன்னாள் எம்.பி., வேணுகோபால் தொடங்கி வைத்தார். மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல் உட்பட 14 வகையான நல உதவிகளை பெற கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அளவீடுகள் செய்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், செயல் அலுவலர் சுகந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x