Published : 24 Nov 2021 03:10 AM
Last Updated : 24 Nov 2021 03:10 AM
ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டு வெங்கடாபுரம் கிராமத்தில் பழமையான சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. கோயில் பூஜை நேரம் முடிந்து நேற்று முன்தினம் இரவு அர்ச்சகர் கோயிலை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை 7 மணியளவில் கோயிலைதிறக்க வந்தபோது கோயில் வளாகத்தில் இருந்த உண்டியல் திருடுபோயிருந்தது. கோயில் வளாகத்தை யொட்டி உண்டியல் காணிக்கை பணம் திருடிக் கொண்டு, உண்டியலை மட்டும் மர்ம நபர்கள் வீசிச்சென்றுள்ளனர். மேலும், கோயிலில் இருந்த பூஜை சாமான்கள், குத்துவிளக்கு உள்ளிட்டவைகளும் திருடுபோகியிருந்தன. இது குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT