Published : 24 Nov 2021 03:10 AM
Last Updated : 24 Nov 2021 03:10 AM

வேலூரில் டிராக்டரில் குடிநீர் விநியோகம் :

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் டிராக்டர் டேங்கர் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் குடிநீர் தேவைக்காக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் அதிகபட்ச அளவாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், ஆம்பூர் அருகே பாலாறு வழியாக வரும் காவிரி குடிநீர் திட்டத்தின் பிராதான குழாய் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால், ஆம்பூருக்கு அடுத்த நிலையில் உள்ள நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி, பேரணாம்பட்டு, குடியாத்தம் நகராட்சிகள், பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர் பேரூராட்சிகள், மாதனூர் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு உள்ளூர் நீராதாரங்களில் இருந்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரிக்கு பொன்னை ஆற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும், பொன்னை தண்ணீரை முத்து மண்டபம் மற்றும் சார்பனாமேடு குடிநீர் தொட்டிகளில் நிரப்பி மற்ற பகுதிகளுக்கும் விநியோகம் செய்ய உள்ளனர். மற்ற பகுதிகளுக்கு டிராக்டர் டேங்கர் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x