Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM
நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே நல்லாம்பாளையம் கசிவு நீர் குட்டையில் மீன் வளர்க்க விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளர் பி.அர்த்தனாரி, துணைச் செயலாளர் சி.எஸ்.சுப்பிரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில கட்டுப்பாட்டுக் குழு எஸ்.மணிவேல், மாவட்ட செயலாளர் ஆர்.குழந்தான் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பள்ளிபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சிக்கு உட்டபட்ட நல்லாம்பாளையம் கிராம கசிவு நீர் குட்டையில் மீன் வளர்க்க விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். மீன் வளர்ப்பு ஏலத்தால் கசிவு நீர் குட்டையை நம்பியுள்ள விளைநிலங்கள் பாதிக்கும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. பள்ளிபாளையம் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT