Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து ஷீரடி, மந்த்ராலயம் செல்ல ஐஆர்சிடிசி சார்பில் சிறப்பு ரயில் சுற்றுலா நடத்தப்படுகிறது.
டிசம்பர் 24-ம் தேதி மதுரையில் புறப்படும் இந்த சிறப்பு ரயில், திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாகச் செல்லும். ஷீரடி சாய்பாபா, பண்டரிபுரம் பாண்டுரங்கன், சனி சிங்கனாப்பூர் சுயம்பு சனீஸ்வரர், மந்த்ராலயத்தில் ராகவேந்திரரை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 7 நாட்கள் கொண்ட சுற்றுலாவுக்கு கட்டணம் ரூ.7,060. இதில் ரயில் பயணக் கட்டணம், தங்கும் வசதி, வாகனப் போக்குவரத்து, சைவ உணவு அடங்கும். கூடுதல் விவரங்களுக்கு 9003140680, 8287932121 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT