Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

தாம்பரம் மின் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் - 99 டிரான்ஸ்பார்மர்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை :

தாம்பரம் மின் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் மற்றும் அதிக பயன்பாடு போன்ற காரணங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் இந்த பிரச்சினைகளைப் போக்க, தாம்பரம் மின் கோட்டத்தில் 99 இடங்களில் 100 கே.வி. திறன்கொண்ட புதிய டிராஸ்பார்மர்கள் ரூ. 7 கோடியில் அமைக்கப்பட்டன. ஆனால் அவை இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. எனவே விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொதுமக்கள் பிரச்சினைகளை தீர்க்க அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. அதிகாரிகளை கேட்டால் தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள், பயன்பாட்டில் கொண்டுவர எங்களுக்கு உத்தரவுபிறப்பிக்கவில்லை என தெரிவிக்கின்றனர். எனவே, அரசு இதில் தலையிட்டு விரைவில் டிரான்ஸ்பார்மர்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது: தாம்பரம் கோட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று 99 இடங்களில் 100 கே.வி.திறன்கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர்கள் ரூ. 7 கோடியில் அமைக்கப்பட்டன. 95 சதவீத பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளன. சம்பந்தப்பட்ட பகுதி எம்எல்ஏக்கள் அனுமதிஅளிக்காததால் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. அவர்கள் ஒப்புதல் அளித்தவுடன் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x