Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

கள்ளக்குறிச்சி அருகே - பள்ளி மாணவிக்கு தொந்தரவு : 2 ஆசிரியர்களுக்கு சிறை தண்டனை :

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த மேல்நாரி யப்பனூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2018 ம்ஆண்டு எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவியிடம், பள்ளி மாணவர்கள் முன்னிலையில் அதே பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நிர்மல் பிரேம்குமார் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டார். தொடர்ந்து அந்த மாணவியை சமூக அறிவியல் ஆசிரியர் லாரன்ஸ் மிரட்டியுள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில், காவல்துறையினரால் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமாரவேல் இவ்வழக்கில் ஆசிரியர் நிர்மல் பிரேம்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30,000 அபராதமும், சமூக அறிவியல் ஆசிரியர் லாரன்ஸூக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x