Published : 23 Nov 2021 03:08 AM
Last Updated : 23 Nov 2021 03:08 AM
விருத்தாசலம் அடுத்த நல்லூர் மணிமுக்தாற்றில் குளித்த இரு பள்ளி மாணவர்களில் ஒருவரை உயிருடன் மீட்டனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் மகன் சூர்யா (13), சக்திவேல் மகன் பிரதீப் (13). இருவரும் நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று மாணவிகளுக்கு மட்டும் வகுப்பு நடைபெற்ற நிலையில், சூர்யா, பிரதீப் இருவரும் பள்ளி சீருடையில் வீட்டிலிருந்து புறப்பட்டு நல்லூர் வில்வனேஸ்வர் கோயில் அருகே மணிமுக்தா ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் பிரதீப் மரக்கிளையை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் பிரதீப்பை மீட்டனர்.
சூர்யா தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதையறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மணிமுக்தாற்றில் நல்லூர் - இலங்கியனூர் மேம்பாலம் வரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT