Published : 23 Nov 2021 03:08 AM
Last Updated : 23 Nov 2021 03:08 AM

பிரபல யூடியூப் சமையல் கலைஞரின் மகன் போதையில் நட்சத்திர விடுதியில் தகராறு : புதுச்சேரியில் போலீஸாருடன் தள்ளு முள்ளு

புதுச்சேரியில் மது போதையில் உணவகத்தில் தகராறில் ஈடுப்பட்ட பிரபல யூடியூப் சமையல் கலைஞரின் மகனை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் அவரின் உறவினர்கள் இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

யூடியூபில் பிரபலமானவர் ‘டாடி ஆறுமுகம்’ இவருக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உணவகங்கள் உள்ளன. இவரது மகன் கோபிநாத், இவர் தனது சித்தப்பா மகன் ஜெயராம் மற்றும் நண்பர்கள் தாமு மற்றும் ஒருவர் உடன் ஞாயிற்றுக்கிழமை அன்று தனியார் நட்சத்திர உணவக விடுதியில் மது அருந்தியுள்ளார்.

அப்போது அங்கு பணிபுரியும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், மது அருந்தும் நேரம் முடிந்த பின்னரும் மது கேட்டதாகவும் தெரிகிறது. அங்கு பணியில் இருந்த ஜார்ஜ் சினாஸ் என்ற ஊழியர் 11 மணிக்கு மேல் மது விற்பதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆத்திரமடைந்தவர்கள் ஜார்ஜிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை பீர் பாட்டிலால் தாக்கி மது அருந்தும் இடத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்து சாலைக்கு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்‌.

தகவல் அறிந்து அங்கு வந்த முத்தியால்பேட்டை போலீஸா ருக்கும் மது போதையில் இருந்தவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

போலீஸார் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து செல்ல முற்பட்ட போது டாடி ஆறுமுகத்தின் மகன் கோபி மற்றும் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர், இதனை அடுத்து அங்கிருந்த டாடி ஆறுமுகத்தின் தம்பி மகன் ஜெயராம் மற்றும் அவரது நண்பர் தாமு ஆகியோரை போலீஸார் கைது செய்து ஊழியர் ஜார்ஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

தப்பியவர்களை தேடி வருகின்றனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த முத்தியால்பேட்டை போலீஸாருக்கும் மது போதையில் இருந்தவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. டாடி ஆறுமுகத்தின் மகன் கோபி மற்றும் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x