Published : 23 Nov 2021 03:08 AM
Last Updated : 23 Nov 2021 03:08 AM
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அழகாபுரியில் உள்ள குடகனாறு அணையிலிருந்து பாசனத்துக்காக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தண்ணீர் திறந்துவைத்தனர்.
பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், குடகனாறு அணையிலிருந்து உபரி நீர் வினாடிக்கு 54 கன அடி வெள்ளியனை வரை திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 432.75 ஏக்கர், கரூர் மாவட்டத்தில் 1237.22 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் வழியோரங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும், என்றார்.
முன்னதாக வனத்துறை சார்பில் மாவட்ட வன அலுவலகத்தில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் பங்கேற்று நீடித்த நிலைத்த பசுமைப் போர்வைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இரண்டரை லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகளில் ஆட்சியர் ச.விசாகன், மக்களவை உறுப்பினர் வேலுச்சாமி, எம்எல்ஏ காந்திராஜன், மாவட்ட வன அலுவலர் பிரபு, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் கோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT