Published : 23 Nov 2021 03:08 AM
Last Updated : 23 Nov 2021 03:08 AM

தென்காசி திமுக எம்பியை கண்டித்து காவலாளி தீக்குளிக்க முயற்சி :

தென்காசி எம்பி தனுஷ்குமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலத் தை ஆக்கிரமித்து, தனது பெய ருக்கு எழுதித் தருமாறு மிரட்டல் விடுப்பதாக காவலாளி ஒருவர் ஆட்சியர் முன் தீக்குளிக்க முய ன்றார்.

விருதுநகர் மாவட்டம், ராஜ பாளையம் அருகே உள்ள தேவ தானம் சாஸ்தா கோயில் நீர் தேக்கம் முழுக்கொள்ளளவை அடைந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை அணையி லிருந்து தண்ணீரைத் திறந்துவிடும் நிகழ்ச்சி நடை பெற்றது.

ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, ராஜபாளையம் எம்எல்ஏ தங்க பாண்டியன் ஆகியோர் பங்கேற்று, அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவைத்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு காவ லாளியாகப் பணியாற்றிய கணேஷ்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியரின் வாகனத்தின் முன் சென்று உடலில் மண்ணெண் ணெய் ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.

அப்போது, தென்காசி எம்.பி. தனுஷ்குமார் சேத்தூர் பகுதியில் உள்ள தனக்குச் சொந்த மான ரூ.50 லட்சம் மதிப்பிலான இரண்டரை ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து நிலத்தை அவரது பெயருக்கு எழுதித் தருமாறு மிரட்டல் விடுப்பதாகத் தெரிவித்தார்.

போலீஸார் கணேஷ்குமாரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x