Published : 23 Nov 2021 03:08 AM
Last Updated : 23 Nov 2021 03:08 AM

திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளர் மீது மேலும் 2 மாணவிகள் பாலியல் புகார் : 5 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடும் போலீஸார்

திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரித் தாளாளர் மீது மேலும் 2 மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர்.

திண்டுக்கல் அருகே முத்தனம் பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. இங்கு பயிலும் மாண விகளிடம் கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொந் தரவு செய்ததாகக் கூறி, 2 நாட்களுக்கு முன்பு மாணவர்கள் திண்டுக்கல் - பழநி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாணவி ஒருவர் புகாரில் தாளாளர் ஜோதிமுருகன், விடுதி வார்டன் அர்ச்சனா ஆகி யோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அர்ச்சனாவை கைது செய்தனர். ஜோதிமுருகன் தப்பியோடி விட்டார். இந்நிலையில் மேலும் இரு மாணவிகள் தாளாளர் ஜோதிமுருகன் மீது தாடிக்கொம்பு போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து கல்லூரி தாளாளர் மீது மேலும் 2 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர். ஜோதிமுருகனை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள் ளன.

இந்திய மாணவர் சங்கத்தினர் ஆட்சியர் ச.விசாகனிடம் அளித்த மனுவில், மாணவிகளின் எதிர் கால கல்வியை சட்டரீதியாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்தக் குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகளையும் சேர்க்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x