Published : 23 Nov 2021 03:08 AM
Last Updated : 23 Nov 2021 03:08 AM

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் - 3 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி :

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் 3 மகள்களுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தாய் தீக் குளிக்க முயன்றார்.

சாத்தூர் அருகே உள்ள ராவுத்தன்பட் டியைச் சேர்ந்தவர் பொன்மாரியப்பன். கொத்தனார். இவரது மனைவி ராஜலட்சுமி (35). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கிராமத்தில் சிலர் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பொன் மாரியப்பனையும், ராஜலட்சுமியையும் மிரட்டினர்.

பின்னர், ராஜலட்சுமியை சிலர் தாக்கி னர். மேலும், இவர்களது நிலத்தில் பயிரிடப்பட்ட பருத்தி மற்றும் மக்காச் சோள பயிர்களில் விஷ மருந்து தெளித்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி, விருதுநகரில் ஆட்சியரின் கார் முன் தனது மகள்கள் மூவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தானும் ஊற்றிக்கொண்டு தீக் குளிக்க முயன்றார். இதைப் பார்த்த அதி காரிகள் தடுத்து காப்பாற்றினர்.

தேனி

தேனி மாவட்டம், அம்மச்சியாபுரம் முரு கேஸ்வரன் மனைவி மாரியம்மாள் (26).கணவருடன் கருத்து வேறுபாட்டால் 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குழந்தை மகிமாவுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாரியம்மாள் தீக்குளிக்க முயன்றார். போலீஸார் தடுத்து காப்பாற்றினர்.

ஆண்டிபட்டி ஜக்கம்பட்டி பெரிய கருப்பன்(48) என்பவர் தனது பட்டா நிலத்தில் பேரூராட்சி பாதை அமைப் பதைக் கண்டித்தும், ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பை ராமுத்தாய் (72) பூர்வீக நிலத்தை உறவினர்கள் போலி ஆவணம் மூலம் கையகப் படுத்தியதாகக்கூறியும் தற்கொலைக்கு முயன்றனர். பெரியகருப்பன் மீது தேனி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x