Published : 23 Nov 2021 03:08 AM
Last Updated : 23 Nov 2021 03:08 AM

ஈரோட்டில் சிறுபான்மையினர் கடன் பெற சிறப்பு முகாம் இன்று தொடக்கம் :

ஈரோடு: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் ஈரோட்டில் நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு, தனிநபர் கடன், சுய உதவிக்குழு கடன், கறவைமாடு, ஆட்டோ வாங்க கடன் வழங்கும் சிறப்பு முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பவானி கிளையில் இன்றும் (23-ம் தேதி), அந்தியூர் கிளையில் 29-ம் தேதியும், கோபியில் டிசம்பர் 1-ம் தேதியும், சத்தியமங்கலத்தில் 3-ம் தேதியும், தூக்கநாயக்கன்பாளையம் மற்றும் ஈரோடு மாணிக்கம்பாளையம் கிளையில் 7-ம் தேதியும் சிறப்பு முகாம் நடக்கிறது. முகாம்களில் கடன் பெற விரும்பும் சிறுபான்மையினர், விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x