Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM

சாஸ்த்ரா சார்பில் மாதிரி நீதிமன்றப் போட்டி: : புணே சட்டப் பள்ளி முதலிடம் :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் நேற்று முன்தினம் நடத்திய மாதிரி நீதிமன்றப் போட்டியில் புணே சிம்பியாசிஸ் சட்டப் பள்ளி வெற்றி பெற்றது.

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 17-வது நானி பல்கிவாலா மாதிரி நீதிமன்றப் போட்டி இணையவழியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. தொண்டு நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிப்பது என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில் தேசிய அளவில் முன்னணி கல்வி நிறுவனங்கள் உட்பட 18 சட்டப் பள்ளிகள் பங்கேற்றன.

இதில், இறுதிச் சுற்று நிகழ்வுக்குத் தமிழ்நாடு மனை வணிக மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத் தலைவர் பி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என்.வெங்கட்ராமன் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

இப்போட்டியில் புணே சிம்பியாசிஸ் சட்டப் பள்ளி வெற்றி பெற்றது. இந்த அணிக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2-ம் இடம் பெற்ற டெல்லி குரு கோவிந்த் சிங் இந்திரபிரஷ்தா பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளிக்கு ரூ.25,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், சிறந்த பேச்சாளர் விருது புணே சிம்பியாசிஸ் சட்டப் பள்ளி சேஷாசலா எஸ்.ஜோஷிக்கும்,சிறந்த ஆராய்ச்சியாளர் விருது டெல்லி குரு கோவிந்த் சிங் இந்திரபிரஷ்தா பல்கலைக்கழகச் சட்டப் பள்ளி ஹிர்திக் காஷ்யப்க்கும் தலா ரூ.5,000 ரொக்கப் பரிசுடன் வழங்கப்பட்டது. போபால் தேசிய சட்டவியல் பல்கலைக்கழகத்துக்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x