Published : 22 Nov 2021 03:06 AM
Last Updated : 22 Nov 2021 03:06 AM

வேலைவாய்ப்பு குறித்து போலி விளம்பரம்: ஏஐசிடிஇ எச்சரிக்கை :

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஏஐசிடிஇ பெயரில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிநியமனம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

இத்தகைய பணி நியமனங்கள் எதுவும் ஏஐசிடிஇ சார்பில் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து ஏஐசிடிஇ இணையதளத்தில் https://www.aicte-india.org/ புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுபோன்ற போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களுக்கு ஏஐசிடிஇ பொறுப்பேற்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x