Published : 22 Nov 2021 03:07 AM
Last Updated : 22 Nov 2021 03:07 AM

ராஜபாளையம் அரசு பள்ளிகளில் : சுகாதார வளாகம் திறப்பு :

மாணவ, மாணவிகள் அமர 100 இருக்கைகள் வேண்டும் என பள்ளி நிர்வாகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக தங்கப்பாண்டியன் உறுதி அளித்தார். அதன் பின் பள்ளியில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமை பார்வையிட்டார். அப்போது, பள்ளி அருகே காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாணவர்கள் சிரமம் அடைவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அதையடுத்து, அருகில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்ற தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., பள்ளி அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸாரை நியமித்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்

நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் முத்தையா, பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x