Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு :

நாமக்கல்: வீடு புகுந்து வயதான பெண்ணிடம் 7 பவுன் தாலிச்செயினை பறித்து தலைமறைவான மர்மநபர்களை தேவூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

குமாரபாளையம் அருகே எதிர்மேடு டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் நடேசன் (70). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டின் பின்புற கதவை திறந்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நடேசனின் மகள் சுதா, மருமகன் செல்வமணி இருந்த அறைக் கதவை திறக்க முடியாதபடி துணியால் கட்டிவிட்டு, நடேசன் மனைவி சம்பூர்ணம் (65) அணிந்திருத்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து சேலம் மாவட்டம் தேவூர் காவல் நிலையத்தில் சம்பூரணம் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x