Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் :

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக நீடிக்கும் நிலையில், உபரிநீர் பவானி ஆற்றில் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் 105 அடிவரை, 32.8 டிஎம்சி நீரினைத் தேக்கி வைக்க முடியும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் மழையால், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானிசாகர் அணைக்கு நேற்று மாலை விநாடிக்கு 5721 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், கீழ்பவானி பாசனத்துக்கு 2000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பவானி ஆற்றில் உபரி நீராக விநாடிக்கு 3700 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியிலும், பவானிசாகர் அணையில் இருந்து பவானியிலும் அதிக அளவு உபரிநீர் திறக்கப்படுவதால், ஆறு மற்றும் வாய்க்காலில் குளிக்கவும் சுற்றிப்பார்க்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், மண்சரிவு மற்றும் மரங்கள் விழுவதால், மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x