Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

கிருஷ்ணகிரி  கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டத்தில் உள்ள குருபரப்பள்ளி, சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (23-ம் தேதி) நடக்கிறது

கிருஷ்ணகிரி

 கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டத்தில் உள்ள குருபரப்பள்ளி, சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (23-ம் தேதி) நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சூளகிரி நகரம், மாதரசனப்பள்ளி, உலகம், ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகோட்டா, பந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, குப்பச்சிப்பாறை, எண்ணேகோல்புதூர், சிட்கோ, போலுப்பள்ளி, ஜீனூர், சின்னகொத்தூர், கங்கோஜி கொத்தூர், ஆவல்நத்தம், பதி மடுகு, வே.மாதேப்பள்ளி, வேப்பனப் பள்ளி, நல்லூர், தீர்த்தம், மண வாரனப்பள்ளி, நாச்சிகுப்பம், எப்ரி, தம்மண்டரப்பள்ளி மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என கிருஷ்ணகிரி மின்சார வாரிய செயற்பொறியாளர் வேல் தெரிவித்துள்ளார்.

ஓசூர்

 ஓசூர் கோட்டம் பாகலூர் துணை மின்நிலையம் மற்றும் நாரிகானபுரம் துணை மின்நிலையத்தில் நாளை (23-ம் தேதி) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே, பாகலூர், ஜீமங்கலம், உளியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசப்பள்ளி, பி.முதுகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முத்தாலி, முதுகுறுக்கி, வானமங்கலம், கொத்தப்பள்ளி, சேவகானப்பள்ளி, சிச்சிருகானப்பள்ளி. நாரிகானபுரம், பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி, நரசாப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கூல்கெஜலனதொட்டி, தண்ணீர்குண்டலப்பள்ளி, எலுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என ஓசூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) குமார் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்

 நாமக்கல்லில் நாளை (23-ம் தேதி) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும், என நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் துணை மின் நிலையத்தில் நாளை (23-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓ காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது, என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x