Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை : மழைக்கு 434 குடிசை வீடுகள் இடிந்து சேதம் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது. மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், காய்கறி செடிகள் தண்ணீரில் மூழ்கியது. மேலும், தொடர் மழை பெய்து வருவதால், வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால், நீரில் மூழ்கிய பயிர்கள் அழுகி வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது. ஏற்கெனவே பெய்த மழைக்கு குடிசை வீடுகளில் சுவர்களில் தண்ணீர் ஊறிய நிலையில், நேற்று முன்தினம் இரவில் பெய்த மழைக்கு, கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் 60 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. மாவட்டத்தில் இதுவரை மழைக்கு 434 வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளது.

கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரங்களில் மட்டும் 13 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில், கிருஷ்ணகிரி பழையபேட்டை மில்லத் நகரில், ஷபானா என்பவரது வீட்டின் சுவர் விழுந்ததில் சிறுவன் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: ஊத்தங்கரை 33.60, ராயக்கோட்டை 14, போச்சம்பள்ளி 8.40, பாரூர், பெனுகொண்டாபுரத்தில் 5 மிமீ மழை பதிவானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x