Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

கொடிக்கால்பாளையத்தில் சாலைகளை சீரமைக்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் :

திருவாரூர்: திருவாரூர் அருகே கொடிக்கால்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு, கிளைத் தலைவர் ஜெகபர்அலி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பி.எஸ்.மாசிலாமணி அரசியல் விளக்க உரையாற்றினார். நிர்வாகிகள் செல்வமணி, தர்மதாஸ், முகமது இசாக், பாலதண்டாயுதம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கிளையின் வேலை அறிக்கையை செயலாளர் பி.எம்.பகுருதீன் சமர்ப்பித்தார். புதிய செயலாளராக ஏ.முகமது ஆசிப் தேர்வு செய்யப்பட்டார்.

மாநாட்டில், கொடிக்கால்பாளையம் பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும். திருவாரூர் நகர பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் அடிக்கடி கொடிக்கால்பாளையம் வந்துசெல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x