Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

தொடர் மழையால் உருக்குலைந்த செங்கோட்டை- புளியரை சாலை : வாகன ஓட்டிகள் கடும் அவதி

தொடர் மழையால் செங் கோட்டை- புளியரை சாலை சேத மடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங் களில் இருந்து செங்கோட்டை, புளியரை வழியாக கேரளாவுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக தமிழகத்துக்கு வருகின்றன. தமிழகம், கேரளாவை இணைக்கும் முக்கிய சாலையான. இந்த சாலை வழியாகத்தான் சரக்கு வாகனங்கள் போக்குவரத்து அதிகமாக நடைபெறுகிறது.

சமீபத்தில் பெய்த தொடர் மழையால் செங்கோட்டை- புளியரை இடையே பல இடங் களில் சாலை கடுமையாக சேத மடைந்துள்ளது. ஜல்லிகள் பெயர்ந்து சிதறிக் கிடக்கின்றன. இதனால் இருசக்கர வாக னங்களில் செல்வோர் கடும் அவதிப்படுகின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள் ளதால் இந்த சாலையை உடனடி யாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x