Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

‘பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்' :

திருப்பத்தூர்: தந்தைபெரியார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப் பிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’’ கடந்த 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சமும், 1 பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. தமிழக முதலமைச்சரால் இவ்விருதாளர் தேர்வு செய்யப்படுகிறார். 2021-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’’ வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டுக்கான சாதனைகள், தகுதிகள் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணம் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2021-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதுக்காக விண்ணப்பங்கள் இம்மாதம் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x