Published : 16 Nov 2021 03:08 AM
Last Updated : 16 Nov 2021 03:08 AM

நவ.15 பழங்குடியினர் பெருமை தினம் - பிரதமருக்கு ஆளுநர் நன்றி :

சென்னை

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த தினமான நவ.15-ம் தேதியை பழங்குடியினர் பெருமை தினமாக அறிவித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய விடுதலைப் போரில் அதிமான பங்களிப்பை பழங்குடியினர் வழங்கியுள்ளனர். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவி வாழும் அவர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடும் துயரங்களை அனுபவித்தனர்.

பகவான் மிர்சா முண்டா, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர். துணிச்சலுடன் போராடிய தலைவரான அவர், ஆங்கிலேயேருடன் ஏற்பட்ட போராட்டத்தில் இளம் வயதிலேயே மரணத்தைத் தழுவினார்.

இந்நிலையில், பகவான் மிர்சா முண்டாவின் பிறந்த தினமான நவம்பர் 15-ம் தேதியை பழங்குடியினர் பெருமை தினமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பழங்குடியினரின் தியாகங்களைப் போற்றும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டமைக்காக, பிரதமர் மோடிக்கு தமிழகம் சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x