Published : 14 Nov 2021 03:06 AM
Last Updated : 14 Nov 2021 03:06 AM

குமரி, நெல்லை, தென்காசியில் மிக கனமழை வாய்ப்பு : புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலுப்பெறும் என அறிவிப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தெற்கு அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்நா.புவியரசன், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

வட தமிழகம், அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 14-ம் தேதி (இன்று) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல்மிக கனமழையும், சேலம், நீலகிரி,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மித மான மழையும் பெய்யக் கூடும்.

15-ம் தேதி (நாளை) தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கனமழையும், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யும்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

13-ம் தேதி காலை 8.30 மணிவரையிலான 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமாரில் 14 செ.மீ., சுருளகோடு, தக்கலையில் 13 செ.மீ., சிவலோகம், பெருஞ்சாணி அணையில் 12 செ.மீ.,புத்தன் அணையில் 11 செ.மீ., நாகர்கோவில், இரணியலில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

புதிய காற்றழுத்தம்

தெற்கு அந்தமான், அதை ஒட்டியதாய்லாந்து கடற்கரை பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிஉருவாகியுள்ளது. இது தொடர்ந்து மேற்கு, வடமேற்கில் நகர்ந்து 15-ம் தேதி (நாளை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதற்கடுத்த 2 நாட்களில் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே கரையை கடக்கக் கூடும். அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு மிகவும் குறைவு.

14, 15-ம் தேதிகளில் மத்திய கிழக்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 - 50 கி.மீ.வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x